காதல் ஆசை இல்லாமல் இருந்தேன்
உன்னைக் கானும்
கடைசி நிமிடம்
வரை....
என் கவிதையே
உன்னை கண்டதும்தான்
நான் கண்கள் பெற்ற பயனையும்
அனுபவிக்கிறேன்
நிச்சயமாய் ஆயிரம் பிறப்புகள்
வேண்டுமானாலும் எடுக்கிறேன்
உன்னோடு வாழ்வதற்கு
கோடி முறை கேட்டும்
உன் மௌனங்கள் மட்டுமே
பதில்களாய் எனக்கு
பின்னர் ஏன் பெண்களிடம்
நான் பேசும் போது மட்டும்
சிவந்து போகிறது
உன் கண்ணங்கள்
களைந்து விடு உன் மௌனத்தை
கண்கள் பேசும் காதல் மொழியை
உன் உதடுகள் உச்சரிக்க
ஆசைப்படுகின்றன.
No comments:
Post a Comment