Pages

09/05/10

priyum neram


என் கண்ணில் கடசி காட்சி நீயே
என் இதயத்தின் கடசி துடிப்பும் நீயே
என் உடலை விட்டு உயிர் பிரியும் போது
உன்னை நினைத்து அழுதுகொண்டு பிரியும்

en urave nee than


உன்னை என் கண்கள்
கண்டதில் இருந்து
நீ தான் என் உலகமென
நினைத்திருந்தேன் நான்
உன்னோடு காலை மாலை
கதைப்பதில் உலகையே
சுற்றிவந்த ஒரு கெளரவம்

அனுதினமும் நான்
பார்ப்பதில் ரசிப்பதில்
கேட்பதில் எங்கும் நீ
எல்லாம் நீயாகவே
நிறைந்திருந்தாய்

வேறுபெண்களுடன்
கதைக்காதே என
கூறியவள் நானேதான்
அன்பே உன்னில் நான்
சந்தேகம் கொண்டல்ல

நான் தரும் பாசத்தை விட
இன்னொருத்தி உன்மேல் பாசத்தை
காட்டி உன்னையும் என்னையும்
பிரித்திடுவாளோ என்ற பயத்தினால்

உன் அருகில் நான்
வாழ ஆசைகொண்டேன்
என் கணவனோடும்
உன் மனைவியோடும் அன்றி
உன்னோடு அல்ல

தினமும் என்னில்
குற்றம் கண்டு கத்துவாய்
வார்த்தைகளால்
வஞ்சித்தாய்
சிலேடை வசனங்களால்
சித்திரைவதை செய்தாய்
அப்போதெல்லாம்
நான் கலங்குவேன்

என் அழுகை கண்டு
எனை மறுகணம்
சிரிக்க வைப்பதற்கே
என் அழுகையை ரசிச்சு
கிச்சு கிச்சு மூட்டுவாய்


உரிமையின்றி பழகுவதாக
உதறித்தள்ளினாய் ஒருநாள்
உறவென்று ஆனபின் சகோதரனே
உரிமைக்கு ஏது தயக்கம்

உன்னை நான் புரியவில்லை என
நொடிக்கொருதடவை கொக்கரிப்பாய்
அப்போதெல்லாம் பிரிய நினைப்பேன்

மறுபடி உன்மடியே
கதி என முண்டியடித்து
ஓடி வருவேன்
ஏனெனில்
எனக்கிருக்கும் ஓர் உறவு
நீதான் என் செல்லமே..

kathaliye


காதலியே நீ என்னை ஏன் மறந்தாய்
நான் உன்னை நினைக்கும்போது
காதலியே நீ ஏன் என்னை நெருங்கி வந்தாய்
நான் உன்னை விட்டு விலகும்போது

Thirudan


திருடனாக இருந்தாலும் நீ
பறிகொடுத்த இதயத்தை
யாரிடமும் விற்கவில்லை
காரணம் அதில் இருந்த
காவியம் காதல்

Maru jenmam


உன் நிழலில்
உட்கார்ந்திருந்தேன்
என் ஆயுள் கூடுதடி

உன் உயிரில்
உறைந்திருந்தேன்
அது நூறுஜென்மம் ஆகுதடி

உன் தெருப்பக்கம் இருந்தால் -தினம் தினம்
எனைத்தாண்டி செல்கிறாய்
உன் மனப்பக்கம் இருந்தால் -கணம் கணம்
நினைவாலே அணைக்கிறாய்

என் காதலுக்கு
உன் உயிரை கொடுத்தாய்
என் கவிதைகளுக்கு
உன் ஆயுள் கொடுத்தாய்

என்னை மறுஜென்மம்
எடுக்க வைத்தாய்
எத்தனை முறை நான் பிறந்தாலும்
எனக்கெனவே நீயும் பிறக்கின்றாய்

thuukam


தினம் நீ சாய்ந்து தூங்கும் என் தோல்களை
தடவித்தடவித்தான்
என்னையே நான் தூங்க வைக்கிறேன்.......!