Pages

09/05/10

en urave nee than


உன்னை என் கண்கள்
கண்டதில் இருந்து
நீ தான் என் உலகமென
நினைத்திருந்தேன் நான்
உன்னோடு காலை மாலை
கதைப்பதில் உலகையே
சுற்றிவந்த ஒரு கெளரவம்

அனுதினமும் நான்
பார்ப்பதில் ரசிப்பதில்
கேட்பதில் எங்கும் நீ
எல்லாம் நீயாகவே
நிறைந்திருந்தாய்

வேறுபெண்களுடன்
கதைக்காதே என
கூறியவள் நானேதான்
அன்பே உன்னில் நான்
சந்தேகம் கொண்டல்ல

நான் தரும் பாசத்தை விட
இன்னொருத்தி உன்மேல் பாசத்தை
காட்டி உன்னையும் என்னையும்
பிரித்திடுவாளோ என்ற பயத்தினால்

உன் அருகில் நான்
வாழ ஆசைகொண்டேன்
என் கணவனோடும்
உன் மனைவியோடும் அன்றி
உன்னோடு அல்ல

தினமும் என்னில்
குற்றம் கண்டு கத்துவாய்
வார்த்தைகளால்
வஞ்சித்தாய்
சிலேடை வசனங்களால்
சித்திரைவதை செய்தாய்
அப்போதெல்லாம்
நான் கலங்குவேன்

என் அழுகை கண்டு
எனை மறுகணம்
சிரிக்க வைப்பதற்கே
என் அழுகையை ரசிச்சு
கிச்சு கிச்சு மூட்டுவாய்


உரிமையின்றி பழகுவதாக
உதறித்தள்ளினாய் ஒருநாள்
உறவென்று ஆனபின் சகோதரனே
உரிமைக்கு ஏது தயக்கம்

உன்னை நான் புரியவில்லை என
நொடிக்கொருதடவை கொக்கரிப்பாய்
அப்போதெல்லாம் பிரிய நினைப்பேன்

மறுபடி உன்மடியே
கதி என முண்டியடித்து
ஓடி வருவேன்
ஏனெனில்
எனக்கிருக்கும் ஓர் உறவு
நீதான் என் செல்லமே..

No comments:

Post a Comment