Anbe sirithai
ithayathai tholaithen.
Kaathalithai
ulagai maranthen.
Maranthal
uyiraiyum ilappen.
09/04/10
En Kanavugalai

என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து
செல்ல நினைக்காதே
நானில்லாமல் நீயிருப்பாய்
ஆனால்..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்.!
என்றாவது என்னை
நீ சந்தித்தால்
அழுதுவிடாதே
உன் பிரிவை
சுமக்கின்ற என்
மெல்லிய இதயம்
உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும். .
un arugil
Kathall
காதல் ஆசை இல்லாமல் இருந்தேன்
உன்னைக் கானும்
கடைசி நிமிடம்
வரை....
என் கவிதையே
உன்னை கண்டதும்தான்
நான் கண்கள் பெற்ற பயனையும்
அனுபவிக்கிறேன்
நிச்சயமாய் ஆயிரம் பிறப்புகள்
வேண்டுமானாலும் எடுக்கிறேன்
உன்னோடு வாழ்வதற்கு
கோடி முறை கேட்டும்
உன் மௌனங்கள் மட்டுமே
பதில்களாய் எனக்கு
பின்னர் ஏன் பெண்களிடம்
நான் பேசும் போது மட்டும்
சிவந்து போகிறது
உன் கண்ணங்கள்
களைந்து விடு உன் மௌனத்தை
கண்கள் பேசும் காதல் மொழியை
உன் உதடுகள் உச்சரிக்க
ஆசைப்படுகின்றன.
Subscribe to:
Comments (Atom)



