
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து
செல்ல நினைக்காதே
நானில்லாமல் நீயிருப்பாய்
ஆனால்..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்.!
என்றாவது என்னை
நீ சந்தித்தால்
அழுதுவிடாதே
உன் பிரிவை
சுமக்கின்ற என்
மெல்லிய இதயம்
உன் கண்ணீரின்
கனம் தாங்காமல்
உடைந்துவிடக்கூடும். .
No comments:
Post a Comment