
எனக்கு தலைவலி என்றால்கூட
தவித்து போகுதே உன் மனம்
அப்போது நீ தாயாகிறாய்
அடுத்தவள் அழகையோ
திறமையையோ நான் புகழ்துவிட்டால்
மூத்த பிள்ளையை கொஞ்சினால்
இளய பிள்ளைக்கு வருவதுபோல்
வறுகிறதே பொறாமை உனக்கு
அப்போது நீ சேயாகிறாய்
எனக்கு எனக்கென்றெ நீ
பார்த்து பார்த்து சமைத்து--அதை
ஆசை ஆசையாய் பரிமாறி
நான் ருசித்து சாப்பிட நீ
ரசித்து பார்ப்பாயே
அப்போது நீ தாயாகிறாய்
அதையே என் அம்மா செய்துவிடில்
தனக்கு தனக்கென்றெ சொந்தமான
பொம்மையை அடுத்தவர் பறித்துவிட
ஏங்கிபோகும் குழந்தையைப்போல்
உள்ளத்தால் ஏங்குகிறாயே
அப்போது நீ சேயாகிறாய்
உழைக்க போகும் நான்
வீடு திரும்ப தாமதமெனில்
கரைகின்ற ஒவ்வொரு நிமிடத்திலும்
கைபேசியில் அழைப்பதும்
கவலையுடன் உன் கண்கள்
வாசலை நோக்கிடுதே
அப்போது நீ தாயாகிறாய்
உன்னை கடைகள் திரைஅரங்கு-என
நான் அழைத்து செல்வதெனில்
வெளியே செல்லும் பிள்ளையைப்போல்
உற்சாகத்தின் உச்சிக்கு போகிறாயே
அப்போது நீ சேயாகிறாய்
தவித்து போகுதே உன் மனம்
அப்போது நீ தாயாகிறாய்
அடுத்தவள் அழகையோ
திறமையையோ நான் புகழ்துவிட்டால்
மூத்த பிள்ளையை கொஞ்சினால்
இளய பிள்ளைக்கு வருவதுபோல்
வறுகிறதே பொறாமை உனக்கு
அப்போது நீ சேயாகிறாய்
எனக்கு எனக்கென்றெ நீ
பார்த்து பார்த்து சமைத்து--அதை
ஆசை ஆசையாய் பரிமாறி
நான் ருசித்து சாப்பிட நீ
ரசித்து பார்ப்பாயே
அப்போது நீ தாயாகிறாய்
அதையே என் அம்மா செய்துவிடில்
தனக்கு தனக்கென்றெ சொந்தமான
பொம்மையை அடுத்தவர் பறித்துவிட
ஏங்கிபோகும் குழந்தையைப்போல்
உள்ளத்தால் ஏங்குகிறாயே
அப்போது நீ சேயாகிறாய்
உழைக்க போகும் நான்
வீடு திரும்ப தாமதமெனில்
கரைகின்ற ஒவ்வொரு நிமிடத்திலும்
கைபேசியில் அழைப்பதும்
கவலையுடன் உன் கண்கள்
வாசலை நோக்கிடுதே
அப்போது நீ தாயாகிறாய்
உன்னை கடைகள் திரைஅரங்கு-என
நான் அழைத்து செல்வதெனில்
வெளியே செல்லும் பிள்ளையைப்போல்
உற்சாகத்தின் உச்சிக்கு போகிறாயே
அப்போது நீ சேயாகிறாய்
No comments:
Post a Comment